Tuesday, January 17, 2012

காளிகாம்பாள் கவசம்


முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
காத்தருள்வாயே கற்பக கணபதியே

அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
பாரதிபாடிய பரமகல்யாணியே
வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்
கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்
காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
போற்றி போற்றி அங்கயற்கண்ணியே  போற்றி
போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி

ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
நற்பவி நற்பவி நற்பவி ஓம்

6 comments:

  1. மிகவும் அருமையான தகவல்கள்.
    மிகவும் அருமையான படைப்புக்கள்.
    நன்றி.
    ஆர்.ராஜாராம்.....
    மயிலாடுதுறை.நாகைமாவட்டம்.
    bagavathikalvettu.blogspot.com

    ReplyDelete
  2. அன்னையின் அருள், அனைவரும் பெற அனுதினம் துதிப்போம்

    ReplyDelete
  3. I am a devotee of Shri Kalikambal, though my Kula Deivam is Shri Mathurakali of Siruvachur. I visit the Kalikambal Temple every Friday and chant the slokas viz. Kali Ashtakam, etc. While Shri Kalikambal is facing towards West Direction, Shri Mathurakali Amman is facing north, as if the Sisters are trying to look each other. Shri Mathurakali Amman Temple generally opens only on Mondays & Fridays. Shri Mathurakali is equally powerful like Shri Kalikambal, who fulfills the desires of the Devotees.

    ReplyDelete
  4. எல்லாம் அவள் செயல்
    நானா பேசுகிறேன்
    உத்தம பக்தியைப் பற்றிச் சொல்ல
    என்னால் இயலுமா அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
    நாயகியை வர்ணிக்க
    உலகையே நடத்திக்கொண்டிருக்கும்
    சூத்திரதாரியைப் பற்றி
    எதுவுமே எனக்குத் தெரியாது
    நான் பேசவில்லை
    அவள் பேசுகிறாள்
    அவள் சொல்லவைக்கிறாள்
    நான் அடியவன்
    நான் அவளுடையவன்
    இதுவே எனக்குத் தெரியும்
    மற்றவை எல்லாம்
    அவள் செயல் அன்னையின் அருள்

    ReplyDelete
  5. சாந்த நிலையில், வாஸ்தவத்தில், விச்வரூப தர்சனம் காலை 06.30 மணி. அம்பாளைக் காண ஒரே ஜனங்கள் நிற்பார்கள். துஷ்ட ஜன ஸம்ஹாரத்திற்கு (சத்ருக்களை வதம் பண்ணி தர்ம மார்க்கத்தில்) மட்டுமே வந்த அம்பாள், சாந்தமாக, (உக்ரகரூபத்தில் இல்லை) ஹிதமாக, ஸர்வ லோகத்திற்கும் வாழ்க்கையின் ஓயாத சஞ்சலங்களிலிருந்து ஓய்வு தருகிறாள். விச்வரூபத்தை, அம்பாள் கண்ணைப்பார்த்தால் தைர்யம் வரும். வர்ணிக்க வார்த்தை இல்லை. மிகைப்படுத்திச் சொல்ல வில்லை. நமக்கு வேண்டியது, நம்மால் முடிந்தது. விச்வரூப தர்சனத்தின் போது என் மனஸில் அம்பாளை பற்றி, லயித்து, ஸங்கல்பம், ஒரு ஸத்கார்யம், அமைதியில் இல்லாதவர்களுக்கும் நாமே பக்தியுடன் நினைத்து பொறுப்புடன் பண்ணிவிடலாம். அம்பாள் சாந்த ஸ்வரூபியாக ஜனங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் ஆயுள் காலம்பூரா, அதர்ம சக்திகளை அழித்து, ஸஹாயம் செய்ய காப்பதான ரக்ஷணம் செய்கிறாள். எல்லாருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறாள். அவளுடைய பெருமை ஸாதனா மார்க்கத்தில் போகிறவர்களுக்கு மட்டுமே தெரியும். அவளையே சரண் அடைய வேண்டும் என்பது என் லக்ஷயம். ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.

    ReplyDelete
  6. Shri Mathurakali, unlike other Kali Deities, is a Shanta Swaroopi. A visit once to the temple will bring same cheers as that of Shri Kalikambal in Chennai.

    ReplyDelete