Sunday, December 16, 2012

ஏழுமலையான் துதி

ஏழு மலைவாசா ஜெய ஸ்ரீநிவாசா
ஏகாந்த சேவை தரும் ஏகஸ்வரூபா (ஏழு)

வைகுண்ட புரவாச வேங்கட ரமணா
வையகம் உய்யவே வந்தருள் புரிவாய் (ஏழு)

பாற்கடலுள் பள்ளி கொண்ட பரந்தாமனே
பாரினிலே பக்தர்களைக் காத்தருள்பவனே (ஏழு)

தினம் தினமும் அதிகாலை சுப்ரபாதத்துடன்
திவ்யமான தரிசனம் தந்து ரக்ஷிப்பவனே (ஏழு)

மக்கள் மனக்கவலைகளைக் கடிதினில் தீர்த்தே
மனமார உண்டியலை நிரப்பிக் கொள்பவனே (ஏழு)

கோவிந்தா கோவிந்தா என அழைப்போரை
கோலாகலமாய் வாழச்செய்திடும் ஹரியே (ஏழு)

நான்மறைகள் போற்றிடும் நாராயணா
நானுனது அடிமையாக நல்வரம் தருவாய் (ஏழு)

ஏழுமலை ஏறி வரும் எளியோரனைவரையும்
ஏற்றமாய் வாழவே செய்திடும் ஹரியே (ஏழு)

No comments:

Post a Comment